Navigate / search

விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 49. அன்வாரியா தெரு விட்டுக்கட்டையார் முஹம்மது மைதின் மகளும், சின்னக் கனி ராவுத்தர் செய்யது முஹம்மது மனைவியும் ,கமாலுதின் / ஹாஜா மைதின் தாயாரும், சூனா அமீன் சகோதரர்களின் சிறிய தாயாரும் , கூப்பாச்சிக் கோட்டையார் காதர் மைதின் மாமியாருமான , விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் வயது 90 மௌத்து   இன்று மதியம் 1.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

கூத்தாநல்லூர் தாலுக்கா

நமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர்  தாலுக்கா அறிவித்ததன்  மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும்  பல வேலைக்கும் மிக அதிகமாக  கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி

கூத்தாநல்லூரில் 15 ஆண்டாக செயல்படாத பஸ் நிலையம்

கூத்தாநல்லூரில் 15 ஆண்டுகளாக பஸ் நிலையம் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வடிகால் இல்லாததால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. 11வது வார்டில் கொசு மருந்து அடிக்காததால் வைரஸ் காய்ச்சலில் ஒருவர் பாதிப்படைந்துள்ளார். அதேபோல் 5வது வார்டு நகர்மன்ற தலைவர் வசிக்கும் வார்டாகும். இங்கு குளம், சாலை, அம்மா உணவகம், வீடுகள் அருகில் எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் […] Read more

அய்டின் மர்வான் (6 மாத குழந்தை)- மலேசியா வஃபாத்

மலேசியா வஃபாத்து செய்தி 32. மேலத் தெரு சீனி அப்துல் சலாம் பேரனும்,  சீனி முஹம்மது பெளஜீல் அலீம் தம்பி மகனும்,  சீனி முஹம்மது பௌஜீல் மர்ஜீக் மகனுமான அய்டின் மர்வான் ( 6 மாத குழந்தை ) மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் போட்டித் தேர் வின், முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, 15 ஆயிரத்து 445 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் அடுத்த கட்ட தேர்வான முதன்மை (மெயின்) தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு டிசம்பர் 3-ம் தேதி […] Read more

15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு.

டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. , தலைமைகாவலர், கிரேட் 1 காவலர், கிரேட் 2 காவலர் என ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருக்க வேண்டிய மொத்த போலீசார் எண்ணிக்கை – 121215 பேர், இருப்பது -100932 , தேவைப்படுவது -20,283 பேர். இதில் முதல் கட்டமாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு 13,137 பேரை இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.இவர்கள் அனைவரும் சீருடை […] Read more

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான முக்கிய செய்திகள் 2016

# 11 ஆம் வகுப்பு முதல் PhD வரை படிக்கும் மாணவர்கள் உதவித் தொகைக்கு ONLINE ல் விண்ணப்பிக்கும் போது scholarship category யை select செய்யும் போது *Post matric /Top Class என்பதை தேர்வு செய்யவும் # 80% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்ட மாணவர்கள் Post matric & merit cum means Minority scholarship க்கு விண்ணப்பிக்க வேண்டாம், அதற்க்கு பதிலாக , *scholarship to Universities […] Read more

1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more

தேங்குடியார் நஜ்முன்னிசா மௌத்து

6.எ. புது தெரு தேங்குடியார் முஹம்மது மகளும், அல்வானி முஹம்மது அலி மனைவியும், அவுக்கூர் முஹம்மது மன்சூர் அலி / அஷ்ரப் அலி மாமியாரும், அல்வானி சாகுல் ஹமிது / பக்கிர் முஹம்மது தாயாரும், தேங்குடியார் பொன்னாச்சி என்கிற நஜ்முன்னிசா வயது 56 மௌத்து இன்று மாலை 6.45 மணிக்கு மரக்கடை பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்  

பள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும்  தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more