Navigate / search

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க. அமைச்சரின் விசுவாசிகள்

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க.  அமைச்சரின் விசுவாசிகள்   

நூர்தீன் ஜெகபர் சாதிக் வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 85 மேல்கொண்டாழி, தமிழர்தெரு நூர்தீன் அப்துல் வஹாப் மகனும்,  நூர்தீன் ஷேக் பரீத் , முஹம்மது மைதீன் சகோதரரும், நூர்தீன் அப்துல் கரீம் ஆலிம்சா தம்பி மகனும், முஹம்மது காசிம் மைத்துனரும்மான நூர்தீன் ஜெகபர் சாதிக் (வயது 47) மௌத்து   இன்று மாலை 6.15 மணிக்கு சின்ன பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

V.K.S. ஜல்மா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 965. சிந்தாமதர் தெரு பொதக்குடி பூசங்குடியார் (தண்ணீர் பீர்) அப்துல் ரஹ்மான் மருமகளும்,  பொதக்குடி V.K.S. சாதிக் (செல்லப்பா) சகோதரியும், பூசங்குடியார் (தண்ணீர் பீர்) பதுருதீன் சகோதரர்களின் தம்பி சஹாபுதின் மனைவியும், பூசங்குடியார் (தண்ணீர் பீர்) முஹம்மது அலி, தாயாருமான V.K.S. ஜல்மா நாச்சியா வயது 45 மௌத்து நாளை 20.12.2016 காலை 10.30 மணிக்கு பொதக்குடி பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

முஹம்மது அபூபக்கர்(தகரக்கடை அப்பா) வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 6. மேலப்பள்ளி சந்து   புகையிலைக்காரர் ஜபருல்லாஹ் மாமனாரும், சங்கந்தியார் ஜாஹிர் உசேன் அப்பாவும், முஹம்மது கனி மகனும், சேக் அலாவுதின் சகோதரர்களின் தகப்பனாருமான *தகரக்கடை அப்பா  முஹம்மது அபூபக்கர் வயது 90 மௌத்து   இன்று மதியம் 1.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

களப்பால் காதர்ஷா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 1 B ஜின்னா தெரு   இஸ்மாயில் சக்கினா அப்துல்லாஹ் மருமகனும் ,சக்கினா அப்துல் ஜப்பார் மச்சானும், ஆதம்ஷா மகனும் ஹாஜா கனி / பாவா மைதின் தகப்பனாரும், அபுதாஹிர் அப்பாவுமான களப்பால் காதர்ஷா வயது 85 மௌத்து இன்று மாலை 4.45 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

செய்கு மீராலம் சபியா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத் நேரு லைன் ( ஓடப்பீலி )   செய்கு மீராலம் முஹம்மது அலி மகளும்,, செய்கு மீராலம் தாஜ் முஹம்மது அக்காவுமான, செய்கு மீராலம் சபியா நாச்சியா வயது 86 மௌத்து இன்று மதியம் 1.30 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்  

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர், கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் […] Read more

வாணக்காரர் பரீதா பீவி வபாத்

கூத்தாநல்லூர்  வபாத் 14 நேருலைன் ( ஓடப்பீலி ) வாணக்காரர் பக்கீர் முஹம்மது மகளும், மீர்சன் முஹம்மது இஸ்மாயில் மருமகளும், மீர்சன் ஜெய்னுல் ஆபிதீன் மனைவியும், மீர்சன் முஹம்மது இஸ்மாயில் ( காய்லான் ) தாயாரும், சிலிங்கி முஹம்மது அப்துல்லா உம்மம்மாவுமான, வாணக்காரர் பரீதா பீவி வயது 70 மௌத்து இன்று காலை 10.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செயயப்படும்