Navigate / search

திருவாரூரில் 24ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவாரூர்:

 

திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டத்தில் எரிவாயு இணைப்புகள் பெறுவது மற்றும் எரிவாயுவு உருளைகள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின் அதனை களைவது மற்றும் நுகர்வோர்களின் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எரிவாயு நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக  நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுதினம் (24ம் தேதி) மாலை 4-.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில்   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர், எரிவாயுவு வாடிக்கையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.

 

LPG_Gas_Cylinders

Leave a comment