Navigate / search

ரெட் அலர்ட் – பொன்னாச்சி பொது சேவை மையம் அவசர உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது

கூத்தாநல்லூர் செய்தி 📢

அவசர கால விழிப்புணர்வு பதிவு
<><><><><><><><><><><>

கடந்த சில தினங்களாக நமது திருவாரூர் மாவட்டத்திற்க்கு ரெட் அலர்ட் அறிவிப்பு செய்து இன்று இரவும் நாளை 15.11.2018 அதிகமான காற்று மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனைத்து தொலை காட்சி செய்திகளிலும் மற்றும் தினசரி பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன

வல்ல ரஹ்மான் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க நாம் அனைவரும் துஆ செய்வோம்

நாம் வசிக்கும் இல்லங்களிலும் மற்றும் வாடகை குடியிருப்புகள் காலணி வீடுகளில் வசித்து வருபவர்கள் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டால் ஏற்படும் தண்ணீர் மற்றும் குடிநீர் பிரச்சினைகளில் இருந்து விடுபட இன்று முதல் கவனமாக இருந்து தண்ணீர் தொட்டிகளில் நீர் தேக்கி வைத்து விழிப்புடன் இருந்து கொள்ளுங்கள்

நமது கூத்தாநல்லூர் பகுதிகளில் பொது மக்களுக்கு அவசர காலங்களில் ஏதும் இடையூறு மற்றும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலோ அல்லது அதிக மழையின் காரணமாக மழை நீர் தேங்கி நின்றாலோ எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்

அதற்கான அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்

ரெட் அலர்ட் அறிவிப்பின் காரணமாக நமதூர் பகுதி மக்களின் நலன் கருதி பொன்னாச்சி பொது சேவை மையம் அவசர உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது

அவசர கால நிலைகளில் தொடர்பு கொண்டால் உடன் வந்து மக்கள் நலன் சார்ந்த பணி செய்ய காத்திருக்கின்றோம்

நஜ்முதின் எம்.சி
98426 71558
87786 91712
அலாவுதீன்
97158 77951
சிராஜ் என்கிற
சாகுல் ஹமீது
96778 70748
நிஜாம்&கோ நிஜாம்
84287 05010

பொது தகவலுக்காக

 

Leave a comment