Navigate / search

கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணி

கூத்தாநல்லூர் நகராட்சி வார்டு பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியை நகரசபை தலைவர் ஜெயராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகரசபை துணைத்தலைவர் முகமதுஅஷ்ரப், ஆணையர் நாராயணன், பொறியாளர் சந்திரசேகரன், நகரசபை கவுன்சிலர் ராஜசேகரன், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் உதயகுமார், இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

4 வது முறையாக அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் நடத்திய இலவச கத்னா ( சுன்னத் ) நிகழ்ச்சி

அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4 வது முறையாக அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் நடத்திய இலவச கத்னா (சுன்னத் ) நிகழ்ச்சி மூலமாக 27 ஏழை இஸ்லாமிய பிள்ளைகள் பயனடைந்தார்கள். இதற்காக நன்கொடை வழங்கிய புரவலர்ளுக்கும், சிறந்த முறையில் கத்னா செய்த Dr.அமானுல்லாஹ் அவர்களுக்கும், இதற்காக பாடுபட்ட ARSO வின் அங்கத்தினர்களுக்கும்,இடம் கொத்து உதவிய பெரியப் பள்ளி நிர்வாகத்திற்கும், எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். “ஜஸாக்கல்லாஹூ கைரா”.அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்வானாக […] Read more