Navigate / search

2015 ஆம் ஆண்டின் பொது குழு மற்றும் ஒன்று கூடல் நிகழ்ச்சி

துபாயில்  கூத்தாநல்லூர் KNR யூனிட்டி   நண்பர்கள் 2015 ஆம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி  வெள்ளி கிழமை மதியம் ஜபீல் பூங்காவில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. அது சமயம் UAE வாழ் கூத்தாநல்லூர் KNR யூனிட்டி நண்பர்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர். மதியம் ஜும்மா தொழுகைக்கு பின்னர் உணவு பரிமாறப்பட்டது . பின்னர் அமீர் M.M. முஹம்மது ரியாஸ் அவர்களின் தலைமை உரையுடன்  நண்பர்களுக்கிடையே கலந்துரையாடல்  நடைபெற்றது, அது சமயம் இந்த ஆண்டுக்கான நிர்வாகிகளை,  உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுத்தனர்.  அனைத்து நிர்வாகிகளையும்  தேர்தெடுத்த பின்னர்  கேளிக்கை விளையாட்டுகள்   நடைபெற்றது, அது சமயம் அணைத்து நண்பர்களும் மிக உற்சாகமாக கலந்து கொண்டு மகிழ்தனர்.

நிறைவாக போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளும், கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட  பட்ட நமது சகோதரர்களை  ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களை கவ்ரவபடுத்தபடுத்தபட்டது. சிறப்பாக களப்பணி   செய்ததற்காக  சகோதரர்கள்  போயிலகட்டை  ஷேக்  ரியாஸ் மற்றும் காரப்பா  செய்யது அபுதாஹிர்  இருவரும் கவ்ரவபடுத்தபட்டனர், சிறந்த முறையில் அழகிய கடன் திட்டம் மின்பொருள் வலைத்தளம் வடிவமைத்து கொடுத்த சகோதரர்  M.A. முஹம்மது ரியாசுதீன் அவர்களை கவ்ரவபடுத்தபட்டது . திறம்பட செயல் பட்ட அமீர்  சகோதரர் முஹம்மது  ரியாஸ் அவர்களையும் பொது    செயலாளர்  அயுப் கான் அவர்களையும் கவ்ரவபடுத்தபட்டது. இறுதியாக  இந்த பொன்னான தருணத்தை பரிசளித்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்கலாக நிகழ்ச்சி  நிறைவுற்றது.

இந்த நிகழ்சிக்கு உணவு ஏற்பாடு செய்து வழங்கிய  சகோதரர் A.R.சாகுல் ஹமீது அவர்களுக்கும், மற்ற இதர ஏற்பாடுகள்,பரிசு பொருள்,குடிநீர்  மற்றும் அணைத்து தேவைகளை செய்து கொடுத்த சகோதர்கள்  ஷைக் ரியாஸ், K.A.அயுப் கான், A.G.பைரோஸ் கான், LMB. அப்துல், M.A. யூசுப், போயலக்கடை நாதார்சாஹ், விளையட்டு நிகழ்சிகளை மிக சிறப்பாக நடத்தி  கொடுத்த K.H. ஷமீம் சர்பராஸ் அவைகளுக்கும் இந்த நல்ல தருனதில் எங்கள் நன்றி கலந்த சலத்தினை தெரிவித்து கொள்கிறோம்

 

 

Leave a comment