Navigate / search

நகராட்சியை பாதுகாக்கும் மாடுகள்…..

ஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர். இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?…

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..

தமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை […] Read more

நீர் ஆதாரம், நமது வாழ்வாதாரம்.

                       நமது கூத்தாநல்லூரில் தற்போது சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது பருவக்கால மழை சரியாக பொழியாதது மற்றும் பொழிந்த மழையினை வாய்க்கால் , குளங்கள் மூலம் சேமிக்க பொதுமக்கள் தவறியது. ஆற்றில் புரண்டோடும் நீர் நம் முன்னோர்களால் சிறந்த முறையில் தொலைநோக்கு பார்வையோடு அவர்களது சந்ததியுனர்களுக்காக வழி வகுக்கப்பட்டு, வாய்க்கால்கள் வாயிலாக […] Read more

Online Birth & Death Certificate

நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் […] Read more

கூத்தாநல்லூர் தாலுக்கா

நமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர்  தாலுக்கா அறிவித்ததன்  மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும்  பல வேலைக்கும் மிக அதிகமாக  கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி

வாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைகளை அகற்ற கோரிக்கை

கூத்தாநல்லூர் – காந்தி நகரில் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி செய்யவில்லை. எனவே அங்கு குப்பைகள் காற்றில் பறந்து அந்த தெரு முழுவதும் பரவி கிடக்கின்றது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அந்த தெருவாசிகள் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர் .

கூத்தாநல்லூர் சென்ட்ரல் மார்க்கெட்

நமதூரில் விற்பனை ஆகும் அணைத்து ஆடுகளும் இங்கு தான் அறுக்கபடுகிறது. மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த இடத்தில் வைத்து ஆடு அறுத்தால் அல்லது சுத்தம் செய்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தால் நமது ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும்.

கூத்தாநல்லூர் நகராட்சி செய்தி:

நமதூரில் பல இடங்களில் பொதுமக்களுக்கு குறிப்பாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கிய நாய்களை பிடிக்கும் பணியை கூத்தாநல்லூர் நகராட்சி  ஊழியர்கள் துவங்கி உள்ளனர். இதற்காக பலவகையிலும் நகராட்சிக்கு  அழுத்தம் கொடுத்து இந்த பணியை செய்ய தூண்டிய நமதூர் கவுன்சிலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம்  கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.