கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணி
கூத்தாநல்லூர் நகராட்சி வார்டு பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கூத்தாநல்லூர் சிஸ்தி நகரில் நடைபெற்று வரும் தார்சாலை அமைக்கும் பணியை நகரசபை தலைவர் ஜெயராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகரசபை துணைத்தலைவர் முகமதுஅஷ்ரப், ஆணையர் நாராயணன், பொறியாளர் சந்திரசேகரன், நகரசபை கவுன்சிலர் ராஜசேகரன், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் உதயகுமார், இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
![201607250338190623_The-work-on-the-review-of-mayor-in-kuttanallur-tarcalai_SECVPF](/wp-content/uploads/2016/07/201607250338190623_The-work-on-the-review-of-mayor-in-kuttanallur-tarcalai_SECVPF.jpg)