Navigate / search

பொதக்குடியார் முஹம்மது இதாயத்துல்லாஹ் ( கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர்) வஃபாத்

49. பெரியத்தெரு

ஆலி அப்துல் கரீம் பேரனும்,, பொதக்குடியார் P.M.A. அப்துல் ரசீது மகனும், ஜானா முஹம்மது இபுறாஹிம் மருமகனும், பொதக்குடியார் முஹம்மது ரசீன் தகப்பனாருமான, *P.A. முஹம்மது இதாயத்துல்லாஹ்* வயது 34 மௌத்து

நாளை 27.02.2017 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன்*

*கே என் ஆர் யூனிட்டியின் துணை தலைவர் முஹம்மது ஹிதாயதுல்லாஹ்* அவர்களின் எதிர்பாராத வஃபாத் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாது.

பல்வேறு சமூதாய பணியில் தன்னை அர்ப்பணித்து , இன்று நம்மைவிட்டு பிரிந்து விட்டார் என்பதை என்னும்போது நெஞ்சம் ஏனோ கனத்திருக்கிறது.

இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும் தான், அவரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்ய வேண்டும்.

அவர் நம்முடன் பழகிய நாட்களில் யாரிடமாவது புண்படியாக பேசியிருந்தாலோ, இறைவனுக்காக பொறுத்து கொண்டு அவருடைய மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.

இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து அருளுபவனாக..‌‌‌..!

*கனத்த இதயத்துடன்*
கேஎன்ஆர் யூனிட்டி

inna_lillahi_wa_inna_ilaihi_rajioon____by_abdulmunib-d8a9x97

Leave a comment