Navigate / search

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சாவு போலீஸ் விசாரணை

கூத்தாநல்லூர் அருகே உள்ள அத்திக்கடை குட்ரஷா ரகீம் தெருவை சேர்ந்தவர் குத்புதீன் (வயது40). இவருக்கு தொண்டையில் புண் இருந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது குத்புதீனுக்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் அவர் மயங்கி விழுந்து இறந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2016/08/08014434/Police-are-investigating-the-death-of-those-treated.vpf

download

Leave a comment